Monday, January 23, 2012

மாறுவது எப்போ ????

இன்று வரை விளங்கவில்லை
ஒரு உண்மை …

பெண் பார்க்க வருவது
பார்த்த பின்
தகவல் தெரிவிக்கிறேன்
என்று
வந்ததிற்கு டி யோ காபி யோ
அருந்தி விட்டு செல்வது …

இது ஒவ்வொரு பெண்ணின்
வீட்டில் சாதரணமாக நடக்கும் ஒன்று !!!

ஆனால் பெண்ணின் நிலைமை என்ன ????????????

யாரோ வருகிறார்கள் என்று அப்பா சொல்வார்
இந்த புடவை நகை உடுத்தவேண்டும் என்று அம்மா
இப்படி அலங்காரம் என்று உடன் பிறந்தவள்
அப்புறம் விட்டுக்கு அழைக்கப்பட்டு இருக்கும் உறவினர்..

இப்படி பல விதமான செய்திகள் ….

எல்லாம் முடிந்து வருபவர்கள் முன்
தலைகுனிந்து வணக்கம் சொல்லி அமரனும் ..
வந்தவர்கள் …
பெண்ணின் உச்சி முதல் உள்ளங்கால் வரை ..
சோதனை செய்வார்கள் ,…
அது மட்டுமா
சமயல் ,கோலம் ,பேச்சு ஆகியவை பற்றிய விசாரணை ….
முடிந்ததா என்று கேட்டால் இல்லை என்று சொல்வேன் ….


ஊரில் பெரியவர் என மதிக்க படும் என் தந்தை …
வந்தவர்கள் முன் யாரோ போல் உட்கார்ந்திருப்பர் ..
காரணம் அவர் பெண்ணை பெற்றவர் ….
இது என்றும் மாறபோவது
இல்லை என புலப்டுகிறது…

எல்லாம் சுகமாய் முடிந்தது
என்று வழி அனுப்பி வைப்பார்கள் ....

பெண்ணின் திருமணம் நாள் நிச்சயிக்க பஞ்சாங்கத்தோடு அமரும் தந்தை ….
சீர் பற்றி யோசிக்கும் தாய்..
பணம் பற்றிய சிந்தனையில் தமயன்..
அக்காவின் திருமண நாளை கனவில் காணும் தங்கை ...

ஆனால் இடி என திரும்பி வந்தது ..
அனுப்பிய புகைப்படமும் , ஜாதகமும் …

ஏன் என்றால் ..ஏதோ ஒரு காரணம் …

பெண்ணை பெற்றவர்களின் வலி
என்ன என்று தெரியும்????

அது நாளை வந்தவனுக்கு
கல்யாணம் என்று ஒன்று நடந்து
பெண் ஒன்று பெற்று
திருமணம் செய்யும் போது அவ்வலி புரிபடும்!!!!

இதில் தவறு யாரிடம்???
பெண்ணிடம்?
இல்லை
அவளை பெற்றவர்களிடம்??

இரண்டும் இல்லை என்பேன்...

இன்றைய சமுதாயத்தில்
ஆண்கள் செய்யும் அராஜக செயல் யாதெனில் ..

நான்கில் ஒன்று அல்லது ஐந்தில் ஒன்று …
இப்படியாக ஒரு வியாபாரம் …

அனைத்திற்கும் தான் ஆண்மகன் என்ற இறுமாப்பு …
அவர்களுக்கு என்ன
இது இல்லை என்றால் மற்றொன்று....

ஆனால் பெண் விட்டின் நிலைமை …

பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கு தான் வலியும் வேதனயும் …
பெண்ணிற்கோ இரண்டு பக்கம் ..
ஒன்று குடும்பத்தாரின் வலி ...
மற்றொன்று நிராகரிக்க படுவது ...
இவ்விரண்டை விட கொடுமை இந்த உலகில் வேறு ஏதும் இல்லை என்று யாவரும் அறியோம் ..

இப்டியாக நான் ஒட்டு மொத்த ஆண் இனத்தையே குற்றம் சொல்ல வில்லை …
ஏன் என்றால் நல்லவர்களும் இருகிறார்கள் ..
என்னை பெற்று வளர்த்தவரும் உடன் பிறந்தவனும் ஆண் தானே …

சமுதாயத்தை சீர் படுத்தும் முயற்சியில்
பெண்கள் எல்லாம் அன்று பாரதி கண்ட புதுமை பெண்ணை வளம் வர செய்து
தலை நிமிர்ந்து நடக்க பழகி கொடுத்தவர்கள் …
இன்றைய சமுதாயத்தில் எனக்கென்று ஒரு வழி கற்று கொடுத்தவர்கள்
என் சுய சிந்தனைகளை ஊக்குவிப்பவர்கள். .

இப்டியாக ஒரு பெண்ணை வழி படுத்தும் தந்தையும் தமையனும் எங்கே ...

பெண்களை ஈனத்தனமாக மதிக்கும் மனித பிறவிகள் எங்கே …
அப்படி நினைபவர்களுக்கு சமுதாயத்தில் என்ன பெயர் ????

எத்தனை பாரதி பிறந்தாலும் இவர்களை திருத்தமுடியுமா
என்று கேட்டால் ..
முடியவே முடியாது என்று
என் பெண்மை எரிமலையாய் எழும்பி நிற்கிறது …

படித்த பெண்களின் நிலைமையே இதுவெனில் …
படிப்பு வாசனை இன்றி

எங்கோ கிராமங்களில்
விட்டின் வாசலை தாண்டி
வெளி வர முடியாமல்
வாழும் பென்னிகளின் நிலை என்ன??

மாபெரும் கேள்வி குறியாய் கண்கள் முன் தெரிகிறது???????????

Saturday, January 21, 2012

காற்று

மயில் தோகையால் வரடுவது போல்
உன் சில் என்ற தென்றலால்
மனதின் சுமைகளை தூக்கி செல்கிறாய் …

மழை

சில்லென்ற சாரலாய்
பூமியை முத்தமிட்டு செல்கிறாய்