Thursday, June 24, 2010

தினமும் தோற்கிறேன்!!!

தினமும் கண் விழிக்கின்றேன்..
என்னவளின் அன்பை
இன்றேனும்
பெற்று விட வேண்டும் என்று...

இன்றும் தோற்றுப்போய்
உறங்க செல்கிறேன்...
நாளை விடியும்
என்ற நம்பிக்கையில்...

ரசித்தது...

என் விழிகள்
தேடிய பிழையில்லா
அழகிய கவிதை – நீ

என் வானம்

அழகுற தோன்றும்
அழகிய வானவில் – நீ


என் விழிகள்
தேடிய பிழையில்லா
அழகிய கவிதை – நீ
என் இமைகள்
அசையாமல் ரசிக்கும்
அழகிய ஓவியம் – நீ
என் நெஞ்சை
இதமாய் வருடும்
அழகிய தென்றல் – நீ
என் இறுதி வரை
என்னுடன் தொடரும்
அழகிய உயிர் – நீ

என்றும்
என்னுள்ளே நிலைத்திருக்கும்
என் இனிய தோழி – நீ