Tuesday, May 22, 2012

இதுவரை
எனக்காக இதை செய்
கேட்டது உண்டா உன்னிடம் ??
ஒரு முறையாவது …
கண்டிப்பாக இல்லை ….
கேட்டது எல்லாம்
என் பெற்றோரின்
உடல் நலம் நன்றாக இருககோரி ?
அப்படி ஆனால் …
என் வேண்டுதல்
பலிக்காமல் இருக்க
நான் செய்த பாவம் என்ன ?

நான் ஏன் எப்படி ஆனேன்…
வெளியில் பலராலும்
தைரியசாலி
திறமைசாலி
திறம் பட பேசுபவள் ..
மனதில் நினைப்பதை சொல்பவள் ....
இப்படி பல பரிமாணங்களில் வாழ்பவள் ..
என் குடும்பத்தின் முன்னினையில் …
இது எல்லாம் ஊசி குத்தின
பல்லூனாய் போகிறது ..
எல்லோர் வாழ்கையிலும்
வர கூடிய ஒன்று ….
முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரம் …
எனக்கு விருப்பம் இன்றியும்
என் குடும்பத்துக்காக
தலை குன்னிந்து நிற்கிறேன் …

எது எனக்கு வேண்டாம் என்றேனே
எது என்னை வாட்டி வதைகிறதோ ..
எது செய்ய என் மனம் விழைய வில்லையோ …
இதோ அதையே செய்ய நிற்கிறேன்
என் தாய் தந்தையரின்
நிம்மதிக்காக…
என் மனதின் வலியை
வரவழிக்கபட்ட சிரிப்பால் மூடி மறைத்து கொண்டு நிற்கிறேன் …..

Thursday, May 3, 2012

இப்படியும் மனிதர்களா?

இப்படியும் மனிதர்களா?

சூரியன் புலரும் முன்
இரவு முழுதும்
காய்ந்த வயிற்றுக்கு
கிடைத்த பழைய கஞ்சியை
ஊறுகாவுடன் அருந்திவிட்டு
ஆண்கள் கையில் கலப்பையுடன்
பெண்கள் அன்றாட வேலைகளோடு
மத்த எல்லா ஜீவராசிகளும்
அதன் அதன் வேலையில்
ஒரு ஜான் வயிற்றுக்கு
உழைக்கும் போது
இன்னும் சில உயிரினங்கள்
மனிதன் என்று சொல்லி கொண்டு
பொழுது புலரும் விடயலை நோக்கி
தவம் கிடக்கிறார்கள்
மது கடை முன்னே....
கையில் மது கிண்ணத்துடன்
இரவு பகல் தெரியாமல்
விழுந்து கிடக்கும்
இவர்களின் பாவ செயலை
மன்னிக்கும் பெண்கள் இருக்கும்வரை
இப்படியும் ஜீவ ராசிகள்
இப்பூமியின் பாரமாய்
உயிர் வாழ்வது எதற்காக ??