Friday, May 21, 2010

நட்பு!!!

நட்பும் புனிதமானது

காதலாய் மாறும் வரை...

நடை பாதை

தனக்கான பஞ்சநயில் துயில்கிறான் ராஜா...
நீ உறங்குவது என் பஞ்சநயில்
என்றது குயில் ஒன்று...
விவாதம் முற்றியது....
ராஜா சொல்கிறான்
என்னை சுற்றி இருக்கும்
என் மக்களை கேட்டு பார்.....
உம் மக்கள் பயன் படுத்தும்
இடமும் எங்களது என்றது குயில்...
இதுவரை எங்கு போனாய் என்கிறான் ராஜா???
உலகம் சுற்ற சென்று போது அபகரிதாய்
என்றது குயில்...
தோற்று போய் நகர்கிறான் அடுத்த நடை பாதையை நோக்கி...

Thursday, May 20, 2010

எவ்வளவு துன்பம் இறுப்பினும்...
மறந்து போகிறேன் ..
தாயின் சிரிப்பில்...
================
எவ்வளவு துன்பம் இறுப்பினும்...
மறந்து போகிறேன்
என்னவளின் பார்வையில்
========================
எவ்வளவு துன்பம் இறுப்பினும்...
மறந்து போகிறேன்
உன் சிரிப்பில்!!!
============================

Tuesday, May 18, 2010

ஆசை !!

மழையில் நினைய ஆசை
என் சந்தோஷத்திற்காக அல்ல
என் கண்ணீருக்காக !!
மழை பெண்ணிற்கு
யார் மீது கோவமோ...
அல்லது
மனிதில் எத்துனை பெரிய பாரமோ..
இப்படி கரைகிறாள்....
கண்ணீராய்.....

அநாதை இல்லம்!!!!!

தாலாட்ட தாய் இல்லை
சீறாட்ட தந்தை இல்லை
பாசம் கொள்ள தமையன் இல்லை
வம்பு பண்ண தம்பி இல்லை
உடன் பயில தோழன் இல்லை
பகிர்ந்து கொள்ள தோழி இல்லை
அறிவுரை சொல்ல ஆசான் இல்லை
என் எனில்
உண்ணுவது அறிய கண்
இல்லை
மனதில் உள்ளது
பகிர்ந்து கொள்ள
பேசும் திறன் இல்லை
கேட்டு மகிழ கேட்கும்
திறன் இல்லை
ஓடி விளையாட கால்கள் இல்லை
இப்படி ஏதும் முழுமை
இல்லாத உயிரை
படைக்க கடவுள் யோசிகவில்லையோ....
யோசித்தார் என நினைக்கிறன்
முடங்கவாவது ஒரு இடம் தந்துள்ளார்...
பணம் இன்றி
நடத்த துடிக்கும்
நல் உள்ளத்தின்
அநாதை இல்லத்தில் !!!!

Tuesday, May 4, 2010

ரசித்தது!!!

தெரு பாட்டுக்காரன்
வெகு ஜன இரைச்சலின்
ஊடேயும் தேன் குரலில் காதில் வந்து
பாயும் உன் கானங்கள்
கொடுக்கும் மகிழ்ச்சிக்கு
நன்றி சொல்ல
வார்த்தைகள் உண்டு
ஆனால் என்னிடம்
வாய் இல்லை
கை கூப்பினேன்
பார்க்க உன்னிடம்
பார்வையே இல்லை.