Sunday, July 15, 2012

Mudhal kadhal!! In 2006

வெள்ளியாய் சிரித்து
தெருவை வலயவந்தவள்
இன்று
மூலையில் முடங்கி கிடக்கிறாள்
காரணம்
தன் உள்ளக்கணவனாய்
குடியேறிய
காதலனின் திருமணம்
நடக்கிறது என்று....

எங்கோ கேட்கும்
ஓடையின் சலசலப்பு
பறவைகளின் சங்கீதம்
அதனுடன் கலந்து
செவியை எட்டுகிறது
"கொட்டி மேளம் ".....

ஏதோ உணர்வு தோன்ற
தெருவீதியை பார்கிறேன்
மனபெண்ணோடு திருமண
கோலத்தில் முன்னால் காதலன்!!!

இவள் கண்களில்
கண்ணீர் பொங்குகிறது
அவன் இமையோரம்
கண்ணீர் துளிகள்
இருவர்க்கும் இடையே
கண்ணீர் பேசுகிறது..
இதயத்தின் ஏதோ
ஓர் ஓரத்தில்
என்னை வைப்பாயா???

Saturday, July 14, 2012

சிறகுகளை வெட்டிய
பறவையாய்...

சொந்தம்
பாசம்
நேசம்
நட்பு
வேலை
பக்தி
இப்படியாகிய கூண்டிற்குள்
அடைப்பட்டு கிடக்கும் என்னை

என்னை என் போல்
பரக்க (மோட்சம் ) வைக்க போகும்
உங்களை
இரு கரம் கொண்டு வரவேற்க
காத்துக்கிடக்கும்
பேதை பெண் இங்கு !!!!!

முதல் காதல்!!!

Written in 2006...
முதல் காதல்...
அழகாய்
அழுகிறேன் நான்
காரணம் தெரியவில்லை
ஆசையோடு
அணைத்து முத்தமிட்டு
முதல் காதலை
வெளிக்கொல்கிறார்
தந்தை தன் குழந்தை
பிறந்தது என்று...

நட்பு!

Written some where on 2006 நட்பு என்பது மூன்றெழுத்து
அதற்கு
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சிந்தனைகள்
உணர்ச்சிகள்
அதனால்
ஆயிரம் ஆயிரம் வெறுப்புகள்
வேதனைகள்
மனஸ்தாபங்கள்
சஞ்சனங்கள்
இது மாறுமா???

நட்பு
அன்பினால் உருவகிக்கப்பட்டு
பாசத்தினால் உயிர்கொடுகப்பட்டு

ஆணுடன் என்றாலும்
பெண்ணுடன் என்றாலும்
அதை
கலங்க படுத்துவதற்கோ
ஏளனம் செய்வதற்கோ
இம்மண்ணுலகில் பிறந்த
எந்த உயிர்க்கும்
கிடையாது.....