Tuesday, June 26, 2012

கண்ணீர்!!

கண்ணீர் சிந்துவது
ஆண் என்றால்
பாவம் எவ்வளவு துக்கம்
இருந்தால் அழிகிறான்
என்று சொல்லும் உலகம் ...

பெண்ணின் கண்ணீரை
அது வலியும் வேதனையால்
வந்தது எனிலும்
அதை ..
நீலி கண்ணீர் ..
இம் என்றால் கண்ணீர் ..
வேஷம் இடுகிறாள்...
நாடகம் போடுகிறாள்...
என்று இன்னும்
பல பரிமாணங்களில்
பெயர் அளிக்கப்படுவது
ஏன்??

வலி என்பது
ஆண் பெண்
பொதுவான ஒன்று
இங்கே எதன்
அடிபடையில்
பிரிக்கபடுகிறது????

நித்தமும்
இறைவனின் திருநாமம்
வேண்டும் தங்களுக்கு
எக்குறையும் இன்றி
வெற்றி பெறுவாய்
நீ மேற்கொண்டுள்ள
இப்பயணத்தில் ..

யாரும் இல்லை
என்று வருந்த வேண்டாம் ..
நொடி பொழுதில்
உலகை சுற்றி வரும்
நம் மனது …
நேசித்த அன்பு உள்ளங்களை
உன் மன கண்முன் கொண்டு சேர்க்கும்..

அதுற்கு மேலும்
சிந்திக்க செயல்பட
நீ வாசித்த புத்தகங்கள் வழி சொல்லும் …

நினைத்து மகிழ
தந்தையின் அறிவுரைகள்
தாய் மடி தூக்கம்
தங்கை குழந்தையின் சிரிப்பு
நண்பர்களுடன் கழித்த பொழுதுகள்
சென்ற இடங்கள்
வணங்கிய தெய்வங்கள் ..
உண்ட உணவு
கண்ட கனவு
இப்படி பல இருக்கையில்

தனிமையின் துயரை
தூக்கி எரி தோழா ...
தோழியை உன் புத்தகம் இருக்க
தோழனாய் உன் மடி கணினி இருக்க
எதை கண்டும் அச்சம் தேவையில்லை

துணித்து எதிர்நோக்குங்கள்
தங்களுது
இந்த பயணத்தால் ஏற்பட போகும்
வெற்றி மாலையை
வாங்கிக்கொள்ள!!!

இங்கனம்:
அன்பு தோழி
மாலதி

Tuesday, June 12, 2012

என் மனதின்
அழுகுரல்
யாருக்கும்
கேட்காமல் இருக்க ....

வரவைக்க பட்ட
சிரிப்பின் ஒளியால்
மறைத்து வாழ
பழகிக்கொண்டேன்!!!!

மயக்கம்

நீ உறங்குவது
உன் வீட்டு
பஞ்சணையில் அல்ல..

மக்கள்
நடமாடும் தெருவீதியில் ...

அதுபோல் நீ
வேலை மிகுதியால்
கலைத்து உறங்கவில்லை ..

உன் உறக்கத்திற்கு
காரணம்
அளவுக்கு அதிகமாய்
உட்கொண்ட மதுவின் மயக்கம் ..

நீ யார் எங்கு இருக்கிறாய்
என்பதை மறப்தற்கு.....

உன்னை நம்பிய
உன் குடும்பமும்
விரைவில் உன் நிலையில்!!


நட்பின் ஆழம்

நட்பு என்னும்
வரமும்
எனக்கு இல்லாமல்
போனது ஏன் ????

நான் நம்பும் சிலர்
என் நம்பிக்கையை
பொய் ஆக்கினர்..

நான் விரும்பிய சிலர்
என் அன்பை
கொச்சை படுத்தியர்...

எனக்கு வரம்
என கிடைத்த சிலர்
என் அருகில் இல்லை …

என் புனர்ஜென்ம வினையா??
கேட்டு பார்க்கணும் ..

யாரிடமேனும் …

அப்படி நான் செய்த
பாவம் என்ன ..
இந்த ஜென்மத்தில்

என்னை இப்படி
துரத்தி துரத்தி
வதைக்க ….


நிறைவேறாத ஆசை



நான் ஆசை பட்ட எதுவும்
நடந்தது
கிடையாது இன்று வரை ..

தெரிந்தோ தெரியாமலோ
விரும்பியோ விரும்பாமலோ
எல்லாம் திணிக்கப்பட்டது..
என்மேல்!!!!!

திணிகபட்டதை
விருப்பமாக்கி வெற்றி பெற்று இருக்கிறேன்
இந்த நொடி வரை ….

நானாய் ஆசைப்பட்டது
விரல் விட்டு என்ன குடியவை …

நடந்தது / நிறைவேறியது
ஜீரோ....
மனதின் ஓரத்தில் ..
பெரும் சுமையாய்
என்றும் நினைவில்
ஒரு வடுவாய்..

எத்திசை திரும்பினும்
பசுமை பசுமை பசுமை !!!!!!
இயற்கை எழில் பொங்கும்
அழகிய மலைத்தொடர்
பூத்து குளுங்கும்
பெயர் அறியா பூக்கள்....
எங்கும் மனம் பரவும்
மலர்ந்த ரோஜாவின் வாசம்...
எறும்பின் அணிவகுப்பை
நினைவுப்படுத்தும்
தேயிலை விவசாயிகள்
அப்பொழுது பறித்த
பழமும் காய்கறிகளை
நமக்கான விற்பனையில்
வியாபாரிகள்...
போகும் இடமெல்லாம்
சுற்றி வரும்
புகைபடகாரர்களும்
டூரிஸ்ட் வழிகாட்டிகளும் ....
இது மட்டுமின்றி
ஜாதி மொழி
பேதம் இன்றி
இயற்கையை ரசிக்க
வந்து குவியும்
மக்களினத்தை
கொடை தாய்
இரு கரம் தழுவி
நம் வரவை
வரவேற்க காத்து நிற்கிறாள்...

எங்களை மகிழ்விக்க
வரும்
தங்கள் வரவை
இந்த
அழகிய மேடை
எதிர்நோக்கி காத்து கிடக்கிறது...

Monday, June 4, 2012

அல்ல யாரை தொட்டுவிட
இந்த வேகம் …
இறைவனின் படைப்பில்
இப்படியும்
சிறகுகளை வெட்டிய
பறவையாய் …

யாரை கண்டு விட்டாய் அலைமகளே ..
அல்ல காண போகிறாயா
சந்தோஷத்தில்
இப்படி வெட்கத்தோடு ஓடுகிறாய்
துள்ளி திரிகிறாய் ..