Wednesday, November 30, 2011

மின் விசிறி:

மின் விசிறி:

உன் சுவாச காற்றில்
துயில் உறங்கும் என்னவன்
விழித்தெழ போகிறான்
உன்னில் இருந்து வெளி வரும்
கானத்தால்.....

உன் இனிய கானத்தை
என்னவனுக்காக மறைத்தால்
உனக்கான என் அன்பு
இரட்டிப்பாகும்...

இல்லையேல்
உன்னை அமர்த்தும் கருவி
என்னிடம் உள்ளதை
நினைவில் வை......

சிறை:

சிறை:

வாய் விட்டு சிரிக்கும்
பெண்ணின் இயல்பு
சிறை செய்ய பட்டது
தாலி எனும் மந்திர கயிற்றால்....

தந்தை!!!!!!!!

தந்தை!!!!!!!!
இமைகளின் ஓரம்
கண்ணீராய்....
என் மனதின்
வேதனை சாரல்கள் ......

உங்களை பார்த்த நொடி
என் வலி உள்ளிழுக்கப்பட்டு
சூரியனை பார்த்த சூரியகாந்தியாய்
மலர்கிறேன் ( சிரிக்கிறேன் )
உங்கள் முகத்தில்
அச்சிரிப்பு எதிரொலிக்க.......

Tuesday, November 22, 2011

அவள் இழந்த குங்குமத்தை
விலை கொடுத்து வாங்க இயலாது …

அவள் பெற்ற அன்பை , சந்தோஷத்தை
அவறின்றி யாரும் தர இயலாது

அவளின் குழந்தையை
அவறின்றி யாரும் தூக்கி விளையாட இயலாது

அவளின் கண்ணீரை துடைக்க
அவரின் இழப்பை சரி செய்ய
வழி இன்றி தவிக்கிறேன் …

இயலாமை என்னை வாட்டி வதைக்கிறது
சமுதாயத்தின் பார்வையில்
அவள் ஒரு விதவை …

ஆனால் அவளோ மூன்று பிள்ளைகளின் தாய் …
அன்பென்ற கடலில் வாழ்கையை கடந்த அவள்
கணவன் என்னும் துடுப்பை இழந்து ….
தத்தளிக்கிறாள் நடுகடலில்!!!!!!!!!

கரை ஏற முயல்கிறாள்
அவளை சுற்றி உள்ள சமுதாயத்தின்
ஏச்சு பேச்சுக்களை சுமந்து …

அதன் ஊடே
அன்பை மட்டுமே தந்த
கணவனின் இறப்பை
ஜீரணிக்க முடியவில்லை
வாழவும் பிடிக்கவில்லை
கணவன் இல்லாத உலகில் …
சாகவும் துணிவுவரவில்லை
பிள்ளைகளின் சிரித்த முகம்
தடையாகிறது ….

இப்படியாக
பிள்ளைகளை தோளில் சுமந்து
அவர்கள் முழ்ககூடாது என்று ..
அவளது கணவனின்
பிரிவுக் கண்ணீரும் அக்கடலில் சேர்ந்து

முழ்கிதவிகும் அவளை கரை சேர்க்க
எங்கும் நிறைந்திருக்கும்
அவள் கணவனின் ஆத்மா
அவளுக்கு மன தெய்ரியத்தையும்
நிம்மதியையும் தர வேண்டுவோம் …

Friday, November 11, 2011

மலருக்கு நிறம் உண்டு
அதற்கு ஒரு பெயரும் உண்டு

மனிதனுக்கு நிறம் உண்டு ...
ஆம் சிகப்பு என்கிறது அறிவியல் ( ரத்தமும் )..
நிறத்துக்கு ஒரு பெயர் என்றால்…
எங்கிருந்து வந்தது பிரிவினை நம்மிடையே ??????

எதில் பிரிவினை இல்லை ….
ஜாதி மதம் இனம் …
உயர்ந்தவர் தாழ்ந்தவர் …
தமிழன் வேற்றான் …
இன்னும் பல பல …

அயிந்தரிவு படைத்த மிருகம்
விட்டு கொடுக்கிறதா தன் இனத்தை ..
நாம் மட்டும் ஏன் இப்படி????????

எப்போது நிகழ போகிறது இந்த மாற்றம்…

இன்னும் எத்தனை எத்தனை மகாகவி , பெரியார் வரினும் …
இவர்களை திருத்துவார் யாருமின்றி கிடக்கிறது நம் நாடு …

Wednesday, November 9, 2011

நான் கடந்து வந்த பாதை
மலர்களால் ஆனது என்றால்
அதில் கிடந்த முட்கள் , கரடு முரடான பாதை
சமன் செய்ய பட்டது
என் பெற்றோர் மற்றும் அண்ணனின் பாதத்தால்
அப்படியாக வலிகளை எல்லாம் தாங்கி
என் பாதையை கடக்க வைத்த
என் அன்புத் தமயனின் பிறந்த தினம் இன்று ..
என்னுடன் சேர்ந்து வாழத்த வாருங்கள் ..

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!