Monday, November 18, 2013

என் பெண்மையின்
உயிர்
நான் சுமக்கும்
கரு....

இல்வாழ்க்கையின்
ஆணிவேர்...
என் கருவில்
விளையாடும்
எங்களின் எதிர்கால வசந்தம்....

Friday, August 23, 2013

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகாஷ்!!!

உனக்கான ஆசை
என்னவென்று கேட்டேன் ..
நீயும் சொன்னாய்
நம் வீட்டின்
சந்தோஷம் என்று..
அப்படியான என்
இனிய தமயனின்
பிறந்ததினம் இன்று....

என்றும் பிறர்
சந்தோஷத்தில்
மகிழும் உனக்கு
எல்லா சந்தோஷங்களும்
கிடைக்க பெற..
வேண்டும் நம்
பெற்றோரின்
அன்பும் ஆசியும்...
உன்னை சுற்றி
சிரித்து வலம் வரும்
சிறார்களின்
இன்முகமும்...
உனக்கு எங்கும்
எதிலும்
வெற்றி உனதாகபெற
வாழ்த்தும்
உனது அன்பு தங்கை...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகாஷ்!!!
Written on Nov 10th 2012
பெண்:
என்ன தவம் செய்தேனோ ....
பெண்ணாய் பிறப்பதற்கு ....
பிள்ளையை சுமப்பதற்கு!

அநாதை இல்லம்

பிறக்கும் பிள்ளைக்கு
தான் போகும்
இடம் தெரியாது....
ஒன்றும் அறியா
பச்சிலம் குழந்தை
தாயின் மடி தேடி
அழுகிறது....
தொட்டிலில் உறங்கியபடி...
பாவம்
அதற்கு தெரியாது

தான் கிடப்பது

அரசு தொட்டிலில் .......

பெண்

கருவில் இருப்பது
பெண்
என்று
அழிக்க துடிக்கும்
கணவனுக்கு தெரியாதா!!!!
தன் மனையாலும் பெண் என்று....

தோழி

பிரிவு .....
ஆழ்மனதின் போராட்டம்...
இந்த போராட்டத்திற்கு உரியவள்
எங்கோ ஒரு திசையில்
என் கண்மறைவில் என் கண்ணீராய் ....
என் நேசம்
தென்றலாய் போய் சேருமா ?
என் அன்புக்குரியவளிடம் ......

தோழி

தோழி
சிரித்து பேசி
மகிழ்ந்தபோது....
ஒரே தட்டில்
உண்டபோது....
ஒன்றாக விளையாடி
உறங்கி .........
அப்போதெல்லாம்
உணராத உன் அன்பை....
.. பிரிவு
என்னும் ஒற்றை சொல்
புரிய வைத்தது....
உனக்கான என் அன்பை
என் மனதில் உன் ஆழத்தை
உன் மனதில்
நம் நட்பை........
.

தோழன்

என்றாவது பிரிய நேர்ந்தால்....
சந்தோஷமாக ஏற்பேன் ...
மரணத்தை உன் மடியினில்....

தந்தை
என் கண்ணில்
தூசு என்றால்
உன் கண்கள் கலங்குகின்றது ...
எனக்கு காய்ச்சல் என்றால்
உன் உடம்பு இளைக்கிறது....
எப்படியாக என்னுள்
நிறைந்து இருக்கும்
என் தந்தையே ....
உன்னை போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை புரட்டுகின்றன்
வார்த்தை தேடி......

பெண்ணும்
பூவும்
உருவால்
வேறுபட்டாலும்
குணத்தால்
ஒன்றுப்பட்டவர்கள்...

பெண் பூவினும்
மேலான மென்மை
கொண்டவள்
பூவும் பெண்ணும்
மென்மையாக
கையாலவேண்டியவை ...

அல்லையேல்
பூவும்
கசங்கி விடும்
பெண்ணும்
வாடிவிடும்...

போற்றி மதிப்போர்
மேன்மக்கள் ..
இதனை மிதிப்போர்
புழுவை போல்
இம்மண்ணில்
மிதிபடவேண்டியவர்கள்
...

Saturday, April 20, 2013



பெண்ணை தொடும்
காம பிசாசுகளே...
ஒரு முறை யோசியுங்கள்..
எதிரில் இருக்கும்
பெண்
உன் தாயோ
சகோதிரி
அல்ல…

இவர்களை தொட
முடியும் எனில்
நீ உன் கண் முன்
இருக்கும் பெண்ணை
தொடு...

ஆனால்
ஒன்று மட்டும்
உண்மை
அவளும்
ஒரு தாய்க்கு
பெண்
உன்னை போல்
ஓர் தமயனின்
சகோதிரி...
அல்ல
எவனோ ஒருவனின்
மனைவி ஆவாள்...

ஓர்
பெண்ணின் வயற்றில்
பிறந்து..
உன்னை சுமந்த
தாயை
இழிவு படுத்துகிறாய்...
கற்பை கலங்க
படுத்திவிட்டாய்...
அது மட்டுமல்ல
உன்னை
மனிதனாய்
கருதும்
எவனும்
எவளும்
மனிதனாக
வாய்ப்பில்லை..

உன்னை
இந்த பூமியில்
ஜனிக்க செய்த
இறைவனையும்
கேள்வி கேட்க
விழைகிறேன் ???

இப்படி ஒருவனை
படைத்து
மண்ணில்
பல பெண்ணை
அசிங்க படுத்தும்
இவனுங்களுக்கு
நீ தர போகும்
தண்டனை என்ன???

பெண்ணை
இழிநிலை படுத்தும்
இவர்களை
எதில் சேர்ப்பது..
கண்டிப்பாக மனிதன் இல்ல??
மிருகங்களுடனும்
சேர்த்து
அவர்களை
இழுவுபடுத்த
விரும்பவில்லை…

பெண்ணிற்கு ( குழந்தை முதல்...)
என் இந்த
நிலை...
என் இந்த
சாபக்கேடு ...

யார் செய்த
பிழை ???

இதற்கு என்ன
வழி??