Monday, October 1, 2012

என்னை தீண்டிய மழை!!!

பேருந்து ஜன்னலில்
சாரலாய்
என்னை தீண்டிய
மழையை

கிழிறங்கி
நனைய
கனா காண்கிறேன்

அது என்னை
பொய்க்க போகும்
கானல் நீர்
என்று தெரியாமல் ..

நான் இறங்கும்
நிறுத்தத்தில்
கால் வைக்கிறேன் ..

தென்றலாய்
சீண்டிய சாரல்
இப்போது
அனலாய்
என் மனதை
சுட்டது ..

மழைக்கு கூட
என் சந்தோஷத்தில்
விருப்பம் இல்லை …

அல்ல இச்சின்ன
சந்தோசம் கூட
இவளுக்கு கூடாது
என்று செய்ய
பட்ட சதியா
அல்ல என் விதியா…

எதுவாயினும்
மலரைப்போல
வாடிய என் மணம்
திரும்ப மலரப்போவது
இல்லை ..

அன்பு முகம்

பனி
மூட்டத்தின் நடுவே
தேடி பார்கிறேன்
எனக்காக பிறந்தவனின்
அன்பு முகம்
தெரிகிறதா என்று !

மரம் செடி!!!

மழை கள்ளனின்
வரவால்
வெட்கத்தில்
தலை தாழ்த்தி
சிரிக்கிறது
தன்
அன்புக்குரியவனின்
தீண்டலால்..

மானம் காக்க
அறிமுகப்படுத்த
துபட்டா!!!!!

இன்று
நம் சமுதாயத்தில்
சூரிய கதிர்வீச்சுகளை
காக்கும் கவசமாய்
பயன்படுத்த பட்டு
வருகிறது....

அழகை காக்க
என்னும்
பெண்களே
உங்கள் மானத்தின்
விலை இவ்வளவு
தானா...

இன்றும் நாட்டின்
எதோ ஒரு முலையில்
நம் பண்பாடு
காக்கப்படுகிறது
என்று பெருமை
படும் என்னால் ..

இது நிலைக்குமா
என்று கேட்டால்
இல்லை என்று
சொல்லுவேன்...

நம் கலாச்சாரம்
சீர் கேட்டு
காலங்கள்
பல உருண்டோடின....

முக அலங்காரத்தில்
கவனம் செலுத்த
மெனக்கிடும் செலவில்..

கிழிந்த உன்
பள்ளி சீருடையின்
கிழிசலை
சரி செய்யலாம்..

சொன்னால்
சொல்பவரையும்
வெறுக்கும் வயது
இது...

பாட புத்தகத்தில்
படிய வேண்டிய

கண்கள் ..
சுற்றி இருக்கும்
ஆடவர்களையும்
விமர்சிப்பதிலும் ..
கவரும் திரை
நாயகர்களை
வர்ணிப்பதற்கும்...
கதாநாயகிகளின்
ஆடை அணிகலன்களின்
பெருமை சிறுமைகளை
அலசி ஆராய்வதில்
செலுத்தும் அக்கறையை
படிக்கும் புத்தகத்திலும்
உன் பெற்றோரின்
நலன்களில்
அக்கறை
கொண்டு செய்தல்
வருங்கால சமுதாயம்
இளைஞர் கையில்..

அல்லையேல்
சமுதாய சிர்கேடின்
ஆரம்ப கட்டத்தில்
இருக்கும் நாம்
விரைவில் கெட்டழிய
உள்ளது என
என் மனது
ஆணித்தரமாக நம்புகிறது...

தந்தை

என் கண்ணீரின்
வலியும்
வேதனையும்
உணரும் ஜீவன்
இவ்வுலகில்
என்றும்
அவர் ஒருவர்
மட்டுமே...

இவ்வுலகில்
ஜெனித்த நொடி
முதல்
இச்சனம் வரை
எனது
உணர்வுகளை
பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்
வாழ்ந்துவரும்
தந்தையை
போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை
புரட்டுகின்றேன்
வாரத்தை தேடி ....