Friday, August 10, 2012

விதவை

கண் முன்
குங்குமம் இருக்க
கைகள் தொட
நடுங்குகிறது
காரணம்
சமூகத்தினர்
எனக்கு
சூட்டிய பட்டம் ..
தெரிந்தோ தெரியாமலோ
விரும்பியோ விரும்பாமலோ
பட்டம் பெற்று விட்டேன்
அதை மீறும்
மன தைரியம்
இல்லாமல் போனது எப்படி ...

கூப்பிடும் பெயர் கழுதையோ
என்றாலும் ...
கூபிடுபவர் கூப்பிட்டால்
இனிக்கும் ...

இனிக்கும் பெயர்
என்றாலும்
பிடிக்காதவர் கூப்பிட்டால்
கசக்கும்....


Tuesday, August 7, 2012

நான் பெற்ற வரம்

பெண் என்பவள்
விட்டின் நிலைப்படியை
தாண்ட விடாது
வளர்க்கும்
பெற்றவர்களின் நடுவே!!
என் கிராமத்தின்
நியதிகளுக்கு ஊடே!!

பெண் என்பவள்
அடுகடியில்
வாழ பிறந்தவள் அல்ல
என் விட்டின் ராணியாய்
வாழ்கையை அனுபவிக்க
பிறந்தவள் என்று!!

உலகை
வளம் வர
வாழ்த்தி
வழி அனுப்பும்
பெற்றோர் கிடைத்தது
முற்பிறவியில் நான்
செய்த பலன்
இப்பிறவியில்
நான் பெற்ற வரம்!!


கண்மணியே!!!!

இசை!!!

இசை …
கவிஞர்
உதிர்க்கும்
வார்த்தைகளுக்கு
கொடுக்கப்படும்
உயிர் ..

முத்தாய் உதிரும்
வார்த்தை கொண்டு
தொடுக்கப்படும்
அழகிய
மணி மாலை …

பூவாய்
மணம்வீசும்
சொற்களால்
ஆனா
மலர் சரம் …

இப்படி பல
பரிமாணங்களில்
வடிக்க பட்ட
சிற்பத்திற்கு
உயிர் தரும்
உன்னத கலை
இசை ...

-------------------------------------- இசை
எல்லோராலும்
உணரப்பட்டு
நேசிக்கப்படுகிறது
வெவ்வேறு பரிமாணங்களில்…

பார்வை அற்றவனுக்கு
கேட்கும் நாதம்
எல்லாம் இசை

காது கேட்கதவற்கு
உணர படும்
சிறு அசைவு கூட
இசை …

குழந்தைக்கு
தாயின் தாலாட்டு இசை
தந்தையின்
பேச்சு இசை …

கணவனுக்கு
மனைவின் அன்பு
இசை

மனைவிக்கு
கணவனின் அன்பு
இசை ..

காதலனுக்கு
காதலியின்
சிணுங்கள்
இசை …

காதலிக்கு
காதலன்
சொல்லும் பொய்
இசை ..

நட்புக்கு
குலுக்கும்
கை ஓசை
இசை ..

இசை என்னும்
இன்ப நதியில்
பலரை போல்
நானும்
நான் ரசிக்கும்
இசையோடு
கை கோர்த்தபடி
என் பயணம் தொடர்கிறது ...
----------------------------------
-------
அல்ல சிற்பியின்
சிலையை
உயிர் பிப்பது ...

இசை
சொற்களின்
உயிர் வடிவம் …
கேட்கும்
மனதை
அசைக்க முடியாமல்
கட்டி போடும்
மாய வலை ..

மனதில்
ஆயிரம் யோசனை
வலி
இருபினும்
நம்மை
மறக்க செய்யும்
மாயகோல் ..

இசை ..
யாரோ நம்மை
மடி மேல் வைத்து
தாலாட்ட …
தோல் மேல் சாய்த்து
சீராட்ட ….
கை பிடித்து
நடந்து செல்ல …
நிலவை பார்த்து
மயங்கி நிற்க
வானம் பார்த்து
கிறங்கி நிற்க
மழை கண்டு
துள்ளலிட
விண்மீன் கண்டு
முத்தமிட
பனித்துளியாய்
வெட்க பட
அந்தி மாலை
சூரியனாய்
சிவந்து நிற்க ..
வைக்கிறது
என்னில் இருக்கும்
இசை!!!

Monday, August 6, 2012

மழலைகளின் சிரிப்பில் ….

குழந்தைகளின்
கூச்சலில் ..
கொஞ்சலில் ..
சிணுங்களில் ...
அழுகுரலில்
என்னை தொலைத்து
நிற்கிறேன் …

சுகமாய்
சொல்லவேண்டும் எனில் ..

மனதின்
குமுறல்களை
சோகங்களை ..
வேதனைகளை

மறந்து
புதியதாய்
பிறந்து நிற்கிறேன் ...
மழலைகளின்
சிரிப்பில் ….

Friday, August 3, 2012

மன்னிப்பு

என்னை
மன்னிப்பாயா
தோழனே ..
அன்பான
நண்பனின்
பிறந்தநாளை
மறந்தமைக்கு …

நேரம் கடந்து
வாழ்த்த வந்துள்ளேன் ..

இந்த தோழியின்
மன்னிப்பை
ஏற்றுகொள் ..

இதோ
உனக்காக
நான் தொடுத்த
மலர் செண்டு
உன் கை
கொண்டு சேர்க்க
என் மனம்
விழைகிறது…

இதோ
மலர்ந்து சிரிக்கும்
பூவை போல்
என்றும்
உன் முகம்
புன்னகை
பூக்களால்
மலர்ந்து சிரிக்கட்டும் ..


என்றும்
உன்னை வழி
நடத்தும்
தாய் …
உன்னில் வாழும்
உன் தந்தை
நீ தினம்
துதிக்கும்
இறைவன்
உன்னை நேசிக்கும்
உறவுகள்
நட்புகள்
இருக்கும் வரை
எதிலும் வெற்றி பெற்று
என்றும்
சந்தோஷமாய்
இருக்க நான்
வணங்கும் இறைவனை
வேண்டி நிற்கும்

உன் அன்பு
தோழி
மாலா!!!!