என் அப்பா....
என்னுல் இருந்து
ஒளிக்கும் ஒரே குரல் …
என்றும் எப்போதும் …
அப்பா அப்பா அப்பா …..
அப்பா என்று ஒருவர்
என் வாழ்வில் இல்லை என்றால்..
எனது நிலமை…
சற்று பின் நோக்கி யோசிக்க முயலுகிறேன் ..
..........................
சமுதாயத்தின் பார்வையில்
சாதிக்க துடிக்கும் பெண்…
நான் பெற்ற பட்டம் ....
செய்யும் வேலை ...
பணியில் எனக்கு இருக்கும் பெயர்....
என் தந்தைக்கு
நான் செய்ய நினைக்கும்
செய்ய துடிக்கும் பல அசைகள் ..
எல்லாம் நான் பிறந்த மண்ணோடு
மண்ணாகி போய் இருக்கும் ..
எனக்கு கிடைத்த இந்த தந்தை
கிடைக்கா விட்டால் …
நானும் என் ஊரில்
பிறந்த சாதாரண பெண்ணாய் ….
யாருக்காவது வாழ்கை பட்டு
எதோ ஒரு வாழ்கையை வாழ்ந்து இருப்பேன் …
எனக்கு இத்தகைய தந்தை கிடைக்காவிட்டால் …
அப்படி மீறி என்னை படிக்கவிட்டு இருந்தால் ..
போதும் ஒரு பட்டம் பெற்றது என்று ..
வந்தவனுக்கு
கழுத்தை நீட்ட சொல்லவில்லை
என் அப்பா …
என் பெண்
சமுதாயத்தில் சாதிக்கவேண்டும்
என்று நினைத்த
என் அப்பா …
ஆண் பிள்ளைக்கு
ஒரு நியாயம்
பெண் பிள்ளைக்கு
ஒரு நியாயம்
என்று பிரிக்கவில்லை
என் அப்பா ..
நானும் நிமிர்ந்து நின்று
என் சுய சம்பாத்தியத்தில்
வாழ வழி வகுத்து கொடுத்த
என் அப்பா ..
இப்படி சொல்வதற்கு
ஏராளம் உள்ளது என்னிடம் ….
ஆனால் புரிந்து கொள்வதற்கு
இல்லை யாரும் …
பெண்ணிற்கு வயது ஏறுகிறது ..
கல்யாணம் செய்யாமல் ..
பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழ்கிறார்
என கடி சொல் செய்யும்
ஊருக்கு மத்தியில் ..
என் பெண் போல்
யாரும் இல்லை என்று ..
நெஞ்சு நிமிர்த்தி
சொல்லி கொண்டு
மணமகன் தேடும்
என் தந்தைக்கு
இன்னும் ஏழு ஜென்மதில்யும்
மகளாய் பிறக்க அசை படும்
அவர்களது அன்பு மகள் ...