Sunday, July 15, 2012

Mudhal kadhal!! In 2006

வெள்ளியாய் சிரித்து
தெருவை வலயவந்தவள்
இன்று
மூலையில் முடங்கி கிடக்கிறாள்
காரணம்
தன் உள்ளக்கணவனாய்
குடியேறிய
காதலனின் திருமணம்
நடக்கிறது என்று....

எங்கோ கேட்கும்
ஓடையின் சலசலப்பு
பறவைகளின் சங்கீதம்
அதனுடன் கலந்து
செவியை எட்டுகிறது
"கொட்டி மேளம் ".....

ஏதோ உணர்வு தோன்ற
தெருவீதியை பார்கிறேன்
மனபெண்ணோடு திருமண
கோலத்தில் முன்னால் காதலன்!!!

இவள் கண்களில்
கண்ணீர் பொங்குகிறது
அவன் இமையோரம்
கண்ணீர் துளிகள்
இருவர்க்கும் இடையே
கண்ணீர் பேசுகிறது..
இதயத்தின் ஏதோ
ஓர் ஓரத்தில்
என்னை வைப்பாயா???