Monday, October 1, 2012

என்னை தீண்டிய மழை!!!

பேருந்து ஜன்னலில்
சாரலாய்
என்னை தீண்டிய
மழையை

கிழிறங்கி
நனைய
கனா காண்கிறேன்

அது என்னை
பொய்க்க போகும்
கானல் நீர்
என்று தெரியாமல் ..

நான் இறங்கும்
நிறுத்தத்தில்
கால் வைக்கிறேன் ..

தென்றலாய்
சீண்டிய சாரல்
இப்போது
அனலாய்
என் மனதை
சுட்டது ..

மழைக்கு கூட
என் சந்தோஷத்தில்
விருப்பம் இல்லை …

அல்ல இச்சின்ன
சந்தோசம் கூட
இவளுக்கு கூடாது
என்று செய்ய
பட்ட சதியா
அல்ல என் விதியா…

எதுவாயினும்
மலரைப்போல
வாடிய என் மணம்
திரும்ப மலரப்போவது
இல்லை ..