Monday, October 1, 2012

தந்தை

என் கண்ணீரின்
வலியும்
வேதனையும்
உணரும் ஜீவன்
இவ்வுலகில்
என்றும்
அவர் ஒருவர்
மட்டுமே...

இவ்வுலகில்
ஜெனித்த நொடி
முதல்
இச்சனம் வரை
எனது
உணர்வுகளை
பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்
வாழ்ந்துவரும்
தந்தையை
போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை
புரட்டுகின்றேன்
வாரத்தை தேடி ....