இப்படியும் மனிதர்களா?
சூரியன் புலரும் முன்
இரவு முழுதும்
காய்ந்த வயிற்றுக்கு
கிடைத்த பழைய கஞ்சியை
ஊறுகாவுடன் அருந்திவிட்டு
ஆண்கள் கையில் கலப்பையுடன்
பெண்கள் அன்றாட வேலைகளோடு
மத்த எல்லா ஜீவராசிகளும்
அதன் அதன் வேலையில்
ஒரு ஜான் வயிற்றுக்கு
உழைக்கும் போது
இன்னும் சில உயிரினங்கள்
மனிதன் என்று சொல்லி கொண்டு
பொழுது புலரும் விடயலை நோக்கி
தவம் கிடக்கிறார்கள்
மது கடை முன்னே....
கையில் மது கிண்ணத்துடன்
இரவு பகல் தெரியாமல்
விழுந்து கிடக்கும்
இவர்களின் பாவ செயலை
மன்னிக்கும் பெண்கள் இருக்கும்வரை
இப்படியும் ஜீவ ராசிகள்
இப்பூமியின் பாரமாய்
உயிர் வாழ்வது எதற்காக ??