காலை கதிரவன்
தோன்றும் முன்
ஆயிரம் கனவுகளுடன்
துயில் எழுவேன்!!!
என்னை பெற்றெடுத்த
தாயோ..
கையில் சாப்பாட்டை
திணித்து
வழி அனுப்புவாள்..
பள்ளிக்கு அல்ல
பள்ளிக்கு எதிரில்
இருக்கும்
இரும்பு பட்டறைக்கு!!!
காலை முதல்
சுத்தியால்
உடைத்ததின் பயனாய்
என் கைகள்
காய்ந்து கொப்புளித்து
சிரிக்கிறது...
இப்படியான கையை
கொண்டு
தாய் கொடுத்தனுப்பிய
பழய கஞ்சியை
உன்ன கஷ்டப்படுகிறேன்!!!
என் கண்ணீரும் சேர்ந்து
என் கஞ்சியை
ருசி படுத்துகிறது...
கண்ணீர் மல்க
எதிரில் இருக்கும்
பள்ளியை பார்கிறேன்!!!
அங்கு அவர்களின் தாய்
பாசமாய் ஊட்டும்
உணவை
உன்ன மறுக்கிறார்கள்...
எத்தனை பேர்க்கு
இந்த வாய்பு
கிட்டுகிறது...
இப்படி அந்தி
சாய்ந்தும் வேலை
செய்து முடித்து..
வீடு திரும்பும்
போது
பகலவன் மறைந்து
சந்திரன் தோன்றியிருப்பான்..
சந்திரனை கண்ட
ஆனந்தத்தில்
என் தாயை
காணும் ஆவலில்
விரைந்து செல்கிறேன்
கையை கண்டு
கண்ணீர் சிந்துவால்..
அது என் கை புன்னையும்
மனபுன்னையும் சேர்த்து அத்தும்
என்று... அதன் ஊடே
அவளின் பாசத்தோடு
எனக்கு ஊட்டும்
சோறு ....
என கனவு கண்டு
வீடு செல்கிறேன்
அங்கு என் தாயோ
வேலையின் களைப்பில்
உறங்குகிறாள்
கண்ட கனவு
கனவாகி போனது
எண்ணி
அழுவதா சிரிப்பதா???
அல்ல உழைக்கும்
எங்களை
பழிவாங்கும்
இறைவா....
மலராத மத்தப்பாகி
கருகும் என்னை
நீ கொண்டு சேர்
உன்னிடம் ....
Written in 2004:)
தோன்றும் முன்
ஆயிரம் கனவுகளுடன்
துயில் எழுவேன்!!!
என்னை பெற்றெடுத்த
தாயோ..
கையில் சாப்பாட்டை
திணித்து
வழி அனுப்புவாள்..
பள்ளிக்கு அல்ல
பள்ளிக்கு எதிரில்
இருக்கும்
இரும்பு பட்டறைக்கு!!!
காலை முதல்
சுத்தியால்
உடைத்ததின் பயனாய்
என் கைகள்
காய்ந்து கொப்புளித்து
சிரிக்கிறது...
இப்படியான கையை
கொண்டு
தாய் கொடுத்தனுப்பிய
பழய கஞ்சியை
உன்ன கஷ்டப்படுகிறேன்!!!
என் கண்ணீரும் சேர்ந்து
என் கஞ்சியை
ருசி படுத்துகிறது...
கண்ணீர் மல்க
எதிரில் இருக்கும்
பள்ளியை பார்கிறேன்!!!
அங்கு அவர்களின் தாய்
பாசமாய் ஊட்டும்
உணவை
உன்ன மறுக்கிறார்கள்...
எத்தனை பேர்க்கு
இந்த வாய்பு
கிட்டுகிறது...
இப்படி அந்தி
சாய்ந்தும் வேலை
செய்து முடித்து..
வீடு திரும்பும்
போது
பகலவன் மறைந்து
சந்திரன் தோன்றியிருப்பான்..
சந்திரனை கண்ட
ஆனந்தத்தில்
என் தாயை
காணும் ஆவலில்
விரைந்து செல்கிறேன்
கையை கண்டு
கண்ணீர் சிந்துவால்..
அது என் கை புன்னையும்
மனபுன்னையும் சேர்த்து அத்தும்
என்று... அதன் ஊடே
அவளின் பாசத்தோடு
எனக்கு ஊட்டும்
சோறு ....
என கனவு கண்டு
வீடு செல்கிறேன்
அங்கு என் தாயோ
வேலையின் களைப்பில்
உறங்குகிறாள்
கண்ட கனவு
கனவாகி போனது
எண்ணி
அழுவதா சிரிப்பதா???
அல்ல உழைக்கும்
எங்களை
பழிவாங்கும்
இறைவா....
மலராத மத்தப்பாகி
கருகும் என்னை
நீ கொண்டு சேர்
உன்னிடம் ....
Written in 2004:)