ஊர் உறங்கிய பின்..
ஒவ்வொரு நடை பாதை கடையும்
ஒரு ஏழையின் வீடாகிறது
கோடை காலத்தில்.....
ஆனால் மழை காலத்தின்
நடுங்கும் குளிரில்
மழை சாரல்களின் அணைப்பில்
கடையின் வாயிற்கதவை ஒண்டி
உறங்கும் மனிதர்களுக்கு
நம் அரசாங்கம் செய்வது என்ன...
மழையிலும் ஏ.சி யோடு மட்டுமே
வசிக்கும் இவர்கள் செய்வது என்ன...
கணினியுடன் போராடும் நம் இன்றைய உலகம்
செய்வது என்ன
நேரம் கிடைத்தால்
செல்பேசியில் அரட்டை..
பிட்சா ஹுட் , காபி டே
இன்னும் பல வழிகளில் செலவிடும் பணத்தை..
விடின்றி தவிக்கும் மக்களுக்கு
உதவும் எண்ணம் வந்தது உண்டா??
கேட்டால்
வந்தது இல்லை யாருக்கும் இன்று வரை ...
மேல் தட்டு மக்கள் வர்க்கம் ஆகட்டும்
உறங்க கூரை மட்டுமாவது
இருக்கும் கிழ் தட்டு மக்கள் ஆகட்டும்..
இன்று வரை இந்த எண்ணம்
பேச்சு வழக்கில் உள்ள ஒன்று...
ஏன் நாளையும் கூட பேச்சோடு முடிய போகும் ஒன்று...
கனவொன்று நினைவாவது போல்
என்றேனேனும் ஒரே நாள்
நினைவாகட்டும் என்ற கனவுகளுடன்
மனிதர்களின் மத்தியில் ஒரு ஜீவன்......