Tuesday, August 7, 2012

இசை!!!

இசை …
கவிஞர்
உதிர்க்கும்
வார்த்தைகளுக்கு
கொடுக்கப்படும்
உயிர் ..

முத்தாய் உதிரும்
வார்த்தை கொண்டு
தொடுக்கப்படும்
அழகிய
மணி மாலை …

பூவாய்
மணம்வீசும்
சொற்களால்
ஆனா
மலர் சரம் …

இப்படி பல
பரிமாணங்களில்
வடிக்க பட்ட
சிற்பத்திற்கு
உயிர் தரும்
உன்னத கலை
இசை ...

-------------------------------------- இசை
எல்லோராலும்
உணரப்பட்டு
நேசிக்கப்படுகிறது
வெவ்வேறு பரிமாணங்களில்…

பார்வை அற்றவனுக்கு
கேட்கும் நாதம்
எல்லாம் இசை

காது கேட்கதவற்கு
உணர படும்
சிறு அசைவு கூட
இசை …

குழந்தைக்கு
தாயின் தாலாட்டு இசை
தந்தையின்
பேச்சு இசை …

கணவனுக்கு
மனைவின் அன்பு
இசை

மனைவிக்கு
கணவனின் அன்பு
இசை ..

காதலனுக்கு
காதலியின்
சிணுங்கள்
இசை …

காதலிக்கு
காதலன்
சொல்லும் பொய்
இசை ..

நட்புக்கு
குலுக்கும்
கை ஓசை
இசை ..

இசை என்னும்
இன்ப நதியில்
பலரை போல்
நானும்
நான் ரசிக்கும்
இசையோடு
கை கோர்த்தபடி
என் பயணம் தொடர்கிறது ...
----------------------------------
-------
அல்ல சிற்பியின்
சிலையை
உயிர் பிப்பது ...

இசை
சொற்களின்
உயிர் வடிவம் …
கேட்கும்
மனதை
அசைக்க முடியாமல்
கட்டி போடும்
மாய வலை ..

மனதில்
ஆயிரம் யோசனை
வலி
இருபினும்
நம்மை
மறக்க செய்யும்
மாயகோல் ..

இசை ..
யாரோ நம்மை
மடி மேல் வைத்து
தாலாட்ட …
தோல் மேல் சாய்த்து
சீராட்ட ….
கை பிடித்து
நடந்து செல்ல …
நிலவை பார்த்து
மயங்கி நிற்க
வானம் பார்த்து
கிறங்கி நிற்க
மழை கண்டு
துள்ளலிட
விண்மீன் கண்டு
முத்தமிட
பனித்துளியாய்
வெட்க பட
அந்தி மாலை
சூரியனாய்
சிவந்து நிற்க ..
வைக்கிறது
என்னில் இருக்கும்
இசை!!!