Tuesday, June 12, 2012

எத்திசை திரும்பினும்
பசுமை பசுமை பசுமை !!!!!!
இயற்கை எழில் பொங்கும்
அழகிய மலைத்தொடர்
பூத்து குளுங்கும்
பெயர் அறியா பூக்கள்....
எங்கும் மனம் பரவும்
மலர்ந்த ரோஜாவின் வாசம்...
எறும்பின் அணிவகுப்பை
நினைவுப்படுத்தும்
தேயிலை விவசாயிகள்
அப்பொழுது பறித்த
பழமும் காய்கறிகளை
நமக்கான விற்பனையில்
வியாபாரிகள்...
போகும் இடமெல்லாம்
சுற்றி வரும்
புகைபடகாரர்களும்
டூரிஸ்ட் வழிகாட்டிகளும் ....
இது மட்டுமின்றி
ஜாதி மொழி
பேதம் இன்றி
இயற்கையை ரசிக்க
வந்து குவியும்
மக்களினத்தை
கொடை தாய்
இரு கரம் தழுவி
நம் வரவை
வரவேற்க காத்து நிற்கிறாள்...