Tuesday, June 12, 2012

மயக்கம்

நீ உறங்குவது
உன் வீட்டு
பஞ்சணையில் அல்ல..

மக்கள்
நடமாடும் தெருவீதியில் ...

அதுபோல் நீ
வேலை மிகுதியால்
கலைத்து உறங்கவில்லை ..

உன் உறக்கத்திற்கு
காரணம்
அளவுக்கு அதிகமாய்
உட்கொண்ட மதுவின் மயக்கம் ..

நீ யார் எங்கு இருக்கிறாய்
என்பதை மறப்தற்கு.....

உன்னை நம்பிய
உன் குடும்பமும்
விரைவில் உன் நிலையில்!!