Tuesday, June 26, 2012

நித்தமும்
இறைவனின் திருநாமம்
வேண்டும் தங்களுக்கு
எக்குறையும் இன்றி
வெற்றி பெறுவாய்
நீ மேற்கொண்டுள்ள
இப்பயணத்தில் ..

யாரும் இல்லை
என்று வருந்த வேண்டாம் ..
நொடி பொழுதில்
உலகை சுற்றி வரும்
நம் மனது …
நேசித்த அன்பு உள்ளங்களை
உன் மன கண்முன் கொண்டு சேர்க்கும்..

அதுற்கு மேலும்
சிந்திக்க செயல்பட
நீ வாசித்த புத்தகங்கள் வழி சொல்லும் …

நினைத்து மகிழ
தந்தையின் அறிவுரைகள்
தாய் மடி தூக்கம்
தங்கை குழந்தையின் சிரிப்பு
நண்பர்களுடன் கழித்த பொழுதுகள்
சென்ற இடங்கள்
வணங்கிய தெய்வங்கள் ..
உண்ட உணவு
கண்ட கனவு
இப்படி பல இருக்கையில்

தனிமையின் துயரை
தூக்கி எரி தோழா ...
தோழியை உன் புத்தகம் இருக்க
தோழனாய் உன் மடி கணினி இருக்க
எதை கண்டும் அச்சம் தேவையில்லை

துணித்து எதிர்நோக்குங்கள்
தங்களுது
இந்த பயணத்தால் ஏற்பட போகும்
வெற்றி மாலையை
வாங்கிக்கொள்ள!!!

இங்கனம்:
அன்பு தோழி
மாலதி