Tuesday, September 11, 2012

என் தாய்!!!!

நான் அறிந்த 
என் தாய்க்கு 
நாங்கள் தான்
உலகம்!!!

அவளது உலகத்தில்
நால்வர் தான்!!

அப்பா அண்ணன்
  நான் என் தங்கை..
தெய்வம் கூட
எங்களுக்கு 
பிறகு தான் 

எங்கள் கண்களால்
  உலகை 
கண்டவள்...

இன்று 
விதியின் 
வலியால் 
உலகை பார்க்கிறாள்
  அவளது 
கண்களால்...

சற்றே வித்தியாசமாய் 
இருப்பினும்
பழகி கொண்டு
கற்று தேர்கிறாள்..

எங்களின் நலன் 
கருதி..

இப்படியான அன்பு
  கிடைக்கபெற 
நாங்கள் செய்த 
புண்ணியம் 
புலப்படுகிறது..
இப்பிறவி 
அல்லாமல்
முர்ப்பிரவி பயனும்!!!