Sunday, September 16, 2012

நானும் தோற்கிறேன்

யாவரும் செய்யும்
அதே இழி செயல் !!

மண்ணை விட்டு
  பொன்னை தேடி 
செல்கிறேன்...

என் மனதின்
  கேள்வி
முன்
நானும் தோற்கிறேன் !!!

இந்திய மண்ணை
பிரியும் போது !

கண்ணில் குளம்
  கட்டுகிறது
குடும்பத்தை 
பிரியும் போது!

ஆனால்
வழி என்று 
ஏது?????

அன்பான குடும்பம்
  ஆழமான நட்பு 
என்று அழகாய்
பிணைக்க பட்ட 
நான்..

இனிமேல்
  அதை உணரப்போவது
  நினைவில் மட்டுமே!!
என்ற வலி 
நெஞ்சில் நெருஞ்சி முல்லாய்
தைக்கிறது...