Sunday, September 16, 2012

பயணம்

அதிகாலை பொழுது
பனி புகை சூழ்ந்த
ரம்மியமான நேரம் ..
சூரியன் சிரிக்காத விடியல்
பசுமையான மலை தொடர்
எப்பக்கம் திரும்பினும்
பூக்கள் மலர்ந்து
சிரிக்கிறது …
பனி துளிகளுடன் …

இதன் ஊடே ஆன
மலைப்பாதை பயணம் ..

இயற்கையின் ரசிகர்களுக்கு
தெவிட்டத அமுதம் ..
உடலை தீண்டும்
குளிர் காற்று...
மனதை தீண்டும்
பசுமை …

பார்ப்பவர் அனைவரையும்
கவிஞன் ஆக்கும்
அழகு ..

மலை குன்றுகளின்
மத்தியில் வீடுகள்
சரிந்து
வளர்ந்து இருக்கும்
காய் கனிகள்

குளிருக்கு இதமாய்
நாயர் சாய் ..
மனதை
வருடும்
தென்றல் ..

சில்லன
முகத்தில்
மோதும்
பனி சாரல் ..

காதை
தீண்டும்
மெல்லிசை ..

பணியால்
பூத்த
முகத்தின்
செம்மை …

பயணம்
நீலட்டும்
என பிராத்திக்கும்
மனது ...
ஏன் என்று கேட்டால்
கவர்ந்திழுக்கும்
சுற்றுசுழல்
ஒரு புறம் இருக்க ..
மறுபக்கம்
என் உள்ளம்
கவர்ந்தவனுடன்
கை கோர்த்து
தோல் சாயந்து
நடந்து செல்லும்
அச்சில மணி
நேரம்
என்றும்
என் மனதின்
மூலையில்
பசுமையாய்
நிலைத்திற்கும் ….